புதிய ஆண்டு இலங்கையின் பொருளாதாரத்தில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும்: ஜனாதிபதி

Date:

2023ஆம் ஆண்டு புதிய ஆண்டு இலங்கையின் பொருளாதாரத்தில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் தீர்க்கமான ஆண்டாக அமையும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்ட ஜனாதிபதி,

புதிய சிந்தனைகளுடனும் தீர்மானங்களுடனும் வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்வதற்கு புதிய வருடத்தின் விடியல் சிறந்த சந்தர்ப்பம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகுந்த சிரமங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் ஏமாற்றங்களை எதிர்கொண்ட ஒரு வருடத்திற்குப் பிறகு 2023 ஆம் ஆண்டின் புதிய ஆண்டில் நுழைகிறோம்.

நம் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பெரும் சுமையையும், நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதாரச் சரிவை அடுத்து நம்மில் பெரும்பாலோருக்கு ஏற்பட்ட பின்னடைவையும் நான் நன்கு அறிவேன்.

ஆனால் இந்த மோசமான காலகட்டத்தை நாம் ஏற்கனவே கடந்துவிட்டோம் என்றும், 2023 புதிய ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்புமுனையைக் குறிக்கும் ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

இலங்கை பிரித்தானிய மகுடத்தின் காலனியாக இருந்தது, 2023 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும்.

ஆனால் பிரித்தானிய காலனியாக இருந்து சுதந்திரம் பெற்ற பிற நாடுகள் அடைந்த முன்னேற்றத்தை இன்னும் நம்மால் அடைய முடியவில்லை.

எனவே, நாட்டில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் தற்போதுள்ள முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதை புறக்கணிக்க முடியாது, அடுத்த தசாப்தத்தில் வளமான மற்றும் உற்பத்தி திறன் கொண்ட இலங்கையை கட்டியெழுப்ப முன்மொழியப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை நாம் அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த வேலைத்திட்டத்தில் நாட்டை முதன்மைப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான தீர்க்கமான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக பொறுமையுடனும் தைரியத்துடனும் காத்திருந்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய நம்பிக்கையுடன் நாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் வெற்றியுடன் முடிவடைந்து வளமான இலங்கைக்கான கதவுகள் திறக்கப்படும் ஒரு வருடத்தில் வெற்றியடைய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான புத்தாண்டு வாழ்த்துக்கள்! ”

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...