தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா வியாழனன்று பாராளுமன்றில்!

Date:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது பிரச்சாரத்திற்காக செலவிடக்கூடிய அதிகபட்ச  தொகையை தீர்மானிக்கும் உரிமையை தேர்தல் ஆணையத்திற்கு வழங்குவதற்கான ‘தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் மசோதா’  எதிர்வரும்  வியாழன் அன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக பாராளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் கடந்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தில் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி, தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றுக்கு அரசியல் ரீதியாக ஆலோசனை வழங்கியதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட தொகையை தீர்மானிக்கும் ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர், சட்டத்தின் கீழ் தனது பிரசாரத்திற்காக வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து நிதி அல்லது வேறு எந்த உதவியையும் பெறுவது தடுக்கப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்னர் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான தேர்தல் சீர்திருத்தங்களுக்கான தெரிவுக்குழுவினால் இச்சட்டம் முதலில் முன்மொழியப்பட்டது.

Popular

More like this
Related

‘ஒரு உயிர் காப்போம்’: கஹட்டோவிட்டYMMA நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்!

சமூக சேவையை முன்னிறுத்தி, கஹட்டோவிட்ட YMMA  கிளையின் ஏற்பாட்டில் விசேட இரத்த...

சுங்கத்துறை மற்றும் இறக்குமதி சிக்கல்களுக்கு உடனடி தீர்வு: அமைச்சர்களுடன் CUBA வர்த்தகக் கூட்டணி  சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இலங்கை ஐக்கிய வர்த்தகக் கூட்டணி (CUBA) பிரதிநிதிகள்,...

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: தனியார் பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

மத்திய பேருந்து நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...