தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா வியாழனன்று பாராளுமன்றில்!

Date:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது பிரச்சாரத்திற்காக செலவிடக்கூடிய அதிகபட்ச  தொகையை தீர்மானிக்கும் உரிமையை தேர்தல் ஆணையத்திற்கு வழங்குவதற்கான ‘தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் மசோதா’  எதிர்வரும்  வியாழன் அன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக பாராளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் கடந்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தில் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி, தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றுக்கு அரசியல் ரீதியாக ஆலோசனை வழங்கியதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட தொகையை தீர்மானிக்கும் ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர், சட்டத்தின் கீழ் தனது பிரசாரத்திற்காக வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து நிதி அல்லது வேறு எந்த உதவியையும் பெறுவது தடுக்கப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்னர் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான தேர்தல் சீர்திருத்தங்களுக்கான தெரிவுக்குழுவினால் இச்சட்டம் முதலில் முன்மொழியப்பட்டது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...