முட்டை இறக்குமதி செய்தால் பறவைக் காய்ச்சல் ஏற்படும் அபாயம்?

Date:

முறையான வேலைத்திட்டம் இன்றி விருப்பத்திற்கேற்றவாறு கட்டுப்பாடுகளின்றி முட்டைகளை இறக்குமதி செய்தால் இலங்கைக்கு ஏவியன் இன்புளுவன்சா (Avian influenza) எனும் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இச்சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி கருத்து தெரிவிக்கையில்,

முட்டைகளை ஏற்றுமதி செய்யும் போது கவனமாக இருக்குமாறு  வலியுறுத்தினார்.  திடீரென முட்டையை இறக்குமதி செய்து, குறைந்த விலையில் இந்தப் பொருளை சந்தைக்குக் கொடுத்தால், நம் தொழில் நலிவடையும்.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையும், தனியார் துறையும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதையும், நமது நாட்டில் முட்டை மற்றும் கோழித் தொழில் உலகின் சிறந்த தொழில்நுட்ப நிலையை எட்டியதையும் நாம் அறிவோம்.

இந்தத் தொழிலில் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் அதிகம். இந்த நேரத்தில், இந்தத் தொழிலைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அதேபோன்று, இலங்கையில் பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் பெரும் பங்காற்றியுள்ளது.

பறவைக் காய்ச்சல் வராமல் தடுக்க கால்நடை மருத்துவர்கள், கால்நடைப் புலனாய்வு அதிகாரிகள்,  மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை என அனைவரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

அப்படி ஒரு நோய் இந்த நாட்டிற்கு வந்தால் அது மிகவும் பிரச்சினைக்குரிய நிலைமையாக மாறிவிடும். எங்களின் கோழி வளர்ப்பு தொழில் நலிவடைந்து வருகிறது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...