‘இன்று முதல் கதிர்காமம் – கொழும்பு சொகுசு பேருந்துகள் இயங்காது’ – போக்குவரத்து அமைச்சர்

Date:

கதிர்காமத்திலிருந்து கொழும்பு வரை காலி வீதியில் இயங்கும் அரை சொகுசு பேருந்துகள் நிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சில் இன்று (ஜனவரி 4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பஸ்கள் இன்று (ஜனவரி 4) நள்ளிரவு முதல் இயக்கத்தில் இருந்து நீக்கப்படும் என  அமைச்சர்  தெரிவித்தார்.

அதன்படி, அந்த வழித்தடத்தில் வழக்கமான பேருந்துகள் மற்றும் சொகுசு பேருந்துகள் வழமையாக இயங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல், அரை சொகுசு பேருந்துகள் இல்லாததால், பயணிகள் கட்டணம் ரூ.1,541ல் இருந்து ரூ.1,117 ஆக குறைக்கப்படுகிறது.

இதன் மூலம் 1,541 செலுத்தி கதிர்காமத்திலிருந்து கொழும்புக்கு வந்த பயணிகள் அதே பேருந்தில் 1,117 செலுத்தி பயணிக்கலாம்.

கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு 28 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...