‘இன்று முதல் கதிர்காமம் – கொழும்பு சொகுசு பேருந்துகள் இயங்காது’ – போக்குவரத்து அமைச்சர்

Date:

கதிர்காமத்திலிருந்து கொழும்பு வரை காலி வீதியில் இயங்கும் அரை சொகுசு பேருந்துகள் நிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சில் இன்று (ஜனவரி 4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பஸ்கள் இன்று (ஜனவரி 4) நள்ளிரவு முதல் இயக்கத்தில் இருந்து நீக்கப்படும் என  அமைச்சர்  தெரிவித்தார்.

அதன்படி, அந்த வழித்தடத்தில் வழக்கமான பேருந்துகள் மற்றும் சொகுசு பேருந்துகள் வழமையாக இயங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல், அரை சொகுசு பேருந்துகள் இல்லாததால், பயணிகள் கட்டணம் ரூ.1,541ல் இருந்து ரூ.1,117 ஆக குறைக்கப்படுகிறது.

இதன் மூலம் 1,541 செலுத்தி கதிர்காமத்திலிருந்து கொழும்புக்கு வந்த பயணிகள் அதே பேருந்தில் 1,117 செலுத்தி பயணிக்கலாம்.

கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு 28 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Popular

More like this
Related

QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம்...

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...