‘வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு கொடுக்க முட்டை இல்லை’

Date:

நாட்டின் மருத்துவமனைகளுக்கு  முட்டை விநியோகம் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது.

முட்டையின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதையடுத்து வைத்தியசாலைகளுக்கு முட்டை வழங்குவதை நிறுத்தியதால் இந்த நிலை ஏற்பட்டதாக  அரசாங்க மருத்துவ அதிகாரிகள் தலைவர் டாக்டர் ருக்ஷான் பெல்லானா தெரிவித்தார்.

ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தீக்காயப் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், சிறப்பு உணவு வகைகளை வழங்க வேண்டிய நோயாளிகள், புரதச் சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படுபவர்கள் போன்ற நோயாளிகளுக்கு கூட முட்டை  கொடுக்க முடியவில்லை.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வாரத்திற்கு 10,000 முட்டைகள், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வாரத்திற்கு 12,000 முட்டைகள் என வைத்தியசாலை அமைப்புக்கு நிறைய முட்டைகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

எனவே அரசு உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் அல்லது மருத்துவமனைகளுக்கு முட்டை வழங்க வேண்டும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...