ஒருமித்த கருத்துக்கு வருமாறு தேர்தல் ஆணையத்திற்கு ஜனாதிபதி அறிவிப்பு!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சட்டமா அதிபரும் பிரசன்னமாகியிருந்ததுடன், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் 04 கருத்துக்களை முன்வைத்துள்ளமையினால் அவர்கள் முதலில் ஒரு கருத்துக்கு வருமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மையினரின் ஏகோபித்த விருப்பத்துடன் செயற்படுவதாக அறிவித்துள்ள ஜனாதிபதி, ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை என வலியுறுத்தியுள்ளார்.

தேவைப்பட்டால் சட்டமா அதிபரிடம் எழுத்து மூல விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

சுதந்திரமான மற்றும் அமைதியான தேர்தலுக்கான பின்னணி மற்றும் நிபந்தனைகள் குறித்து சட்டமா அதிபர் அவர்களுக்கு அறிவித்துள்ளார்.

சட்டச்சிக்கல் இருப்பின் நேரடியாக தன்னிடம் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் 04 கருத்துக்களை முன்வைத்ததன் காரணமாக நேற்றைய கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...