அதிகரித்து வரும் எச்.ஐ.வி தொற்று விகிதம் குறித்து காலி மாவட்ட சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
காலி மஹமோதர வைத்தியசாலையின் பால்வினை நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி டொக்டர் தர்ஷனி விஜேவிக்கிரம இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
2021 இல் 25 எச்.ஐ.வி உறுதிபடுத்திய நபர்கள் மற்றும் அதற்கு முன்னைய ஆண்டில் 36 பேரும் கண்டறியப்பட்டனர்.
இன்னும் கண்டறியப்படாத நிலையில் மேலும் நோயாளிகள் இருப்பார்கள். அவர்களில் பெரும்பாலோர் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை நாட்டிலிருந்து 427 நபர்கள் பதிவாகியுள்ளதாகவும், 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து 4831 பேர் வரை அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எயிட்ஸ் அபாயகரமான அளவில் பரவி வருவதாக கலாநிதி திருமதி விஜேவிக்ரம கவலை தெரிவித்தார்.