பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்!

Date:

அண்மைய எரிபொருள் விலை திருத்தத்தை அடுத்து பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தனியார் பேரூந்து சங்கங்களுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

தொடர்ச்சியாக பல மாதங்களாக எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பேரூந்து கட்டணத்தை குறைக்க தமக்கு அனுமதியில்லை என தனியார் பேரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், பேரூந்து கட்டணத்தை குறைப்பது குறித்து அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் அதிவேக பேரூந்து கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பங்களாதேஷ் பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று ( 12) நடைபெற்றது. முன்னாள்...

கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022...

இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல...