தேர்தல் நடத்த பணம் இல்லை என்றால், இராஜாங்க அமைச்சர்கள் எதற்கு? :பீரிஸ்

Date:

தேர்தலை நடத்த பணம் இல்லை என்றால், இராஜாங்க அமைச்சர்கள் 39 பேரை நீக்க வேண்டும் என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று சுதந்திர மக்கள் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட  போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்று அரசாங்கம் போலியான பிரசாரங்களை செய்து வருகிறது. உண்மையில் நிதி இல்லை என்றால் நாட்டிலுள்ள 39 இராஜாங்க அமைச்சர்களை நீக்க வேண்டும்.

அத்துடன் 39 இராஜாங்க அமைச்சர்களுக்காக 340 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு பாரியளவில் நிதி செலவிடப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சர்கள் எவருமில்லாது நாட்டை ஒரு வருடம் ஆட்சி செய்தார்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில்...

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும்: பாராளுமன்றில் அமைச்சர் விஜித

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) செப்டெம்பர் முற்பகுதிக்குள் நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக,...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில்...

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் அமைந்துள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு...