கத்தார் தொண்டு நிறுவனம் இலங்கைக்கு மனிதாபிமான உதவியை அறிவித்தது: தடை நீக்கப்பட்டதையடுத்து இலங்கையில் மீண்டும் அலுவலகம்

Date:

கத்தார் தொண்டு நிறுவனம் இலங்கைக்கு 2023 ஆம் ஆண்டிற்கான 11.7 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மனிதாபிமான உதவியை அறிவித்துள்ளது.

கத்தார் தொண்டு நிறுவனம் இலங்கையில் தனது அலுவலகத்தை மீண்டும் திறந்துள்ளது.

இந்நிலையில், கத்தார் தொண்டு நிறுவனம் இலங்கையில் கட்டார் தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தை மீண்டும் திறக்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி நாட்டில் தேவைகளுக்கு ஏற்ப அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு இந்த நிதி ஒதுக்கப்படும்.

பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கட்டார் தொண்டு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டது.

கட்டார் அறக்கட்டளையானது கட்டார் அரசாங்கத்தின் பிரதான தொண்டு நிறுவனமாகும், மேலும் முன்னாள் பொலிஸ் அமைச்சர் சரத் வீரசேகரவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையடுத்து இலங்கையில் தடைசெய்யப்பட்டது.

அப்போது இலங்கை அதிகாரிகள் ‘கட்டார் அறக்கட்டளை’யை பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டதுடன், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் முக்கிய வழக்கு தொடர்பாக பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

பின்னர் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர கட்டார் அதிகாரிகளை கத்தாரில் சந்தித்தபோது குறித்த தடை நீக்கப்பட்டது.

Popular

More like this
Related

எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்

பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக...

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவின் 25ம் ஆண்டு நிறைவு விழா

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் மத்ரஸாவின் முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள்,...

தனது நாட்டின் அனைத்து வங்கிகளிலும் வட்டி சார்ந்த கொடுக்கல் வாங்கல்களை முழுமையான நிறுத்திய ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த வட்டி அடிப்படையிலான வங்கி முறையை அதிகாரப்பூர்வமாக...

முடியும் தறுவாயில் அமெரிக்கா – ஈரான் போர்: டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையே போர் முடிவுக்கு வரும் தறுவாயில் இருப்பதாக ...