சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Date:

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி காலி முகத்திடலில் 75ஆம் சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிகழ்விற்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதனை பொது நிர்வாக அமைச்சு உறுதி செய்துள்ளது.

இந்த நிகழ்வினை நடத்துவதற்கு இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் செலவுகளை குறைக்க முயற்சிக்கப்படும் எனவும், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார போபகே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 75ஆவது சுதந்திர தின வைபவத்தில் ஆரம்பத்தில் சிங்கள மொழியிலும், நிறைவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...