நிதி கொடுப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு திறைசேரி அதிகாரிகள் விளக்கம்!

Date:

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை இந்நேரத்தில் நடத்தினால், தேர்தல்கள் ஆணைக்குழு கோரும் பணத்தை ஒரேயடியாக வழங்காது பகுதிவாரியாக வழங்க முடியும் என பொது திறைசேரி அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே திறைசேரி அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

இந்த கலந்துரையாடலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா மற்றும் அதன் அங்கத்தவர் சபை மற்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கேட்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதுள்ள நிதிச் சிக்கல்கள் காரணமாகப் பணத்தைப் பகுதிகளாக வழங்க முடியும் என திறைசேரி சார்பில் கலந்துரையாடலுக்கு வந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...