உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் சம்பிக்க -குமார வெல்கமவின் புதிய கூட்டணி!

Date:

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை கூட்டாக எதிர்கொள்ள  பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆவது படையணியும், குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியும் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

இன்று திங்கட்கிழமை,ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பிக்க ரணவக்க,

43 ஆவது படையணியை  அரசியல் கட்சியாகவோ அல்லது தேர்தலை இலக்காகக் கொள்ளவோ தாம் உத்தேசிக்கவில்லை என்றும், நாடு கடந்த வருடம் வங்குரோத்து நிலைக்குச் சென்றதை அடுத்து, அந்த இயக்கத்தை புதிய அரசியல் கட்சியாக மாற்றத் தீர்மானித்ததாகவும்   தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியுடன் (NLFP) இணைந்து 43 ஆவது படையணி உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் என்றும் ரணவக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வெல்கம,  கட்சியில் இருந்து பிரிந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின்  ஆசியுடன் புதிய லங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.

Popular

More like this
Related

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன...

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை...

கொழும்பு மாநகர சபையின் வரவு, செலவுத்திட்டம் மீண்டும் 31 இல்

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக...

அரபு மொழிக்கான ‘தோஹா வரலாற்று கலைக்களஞ்சியம் பணிகள்’ பூர்த்தி!

12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் தொகுப்பு முயற்சிகளின் பயனாக,...