உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஷாருக்கான்!

Date:

உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான்  முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

ஷாருக்கான் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் பிரபலமானவர். ‘கிங் கான்’ என்று அன்புடன் அழைக்கப்படும் ஷாருக்கான் , திரைப்படங்களில் நடிப்பதால் மட்டுமல்ல, நிறைய சம்பாதிப்பதாலும் இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாக ஷாருக்கான் நடிப்பில் பெரிய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், அவர் இப்போது உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

ஜெர்ரி சீன்ஃபீல்ட், டைலர் பெர்ரி மற்றும் ‘தி ராக்’ டுவைன் ஜான்சன் ஆகியோருக்குப் பிறகு உலகின் நான்காவது பணக்கார நடிகராக ஷாருக்கான் உருவெடுத்துள்ளார்.

வேர்ல்ட் ஆஃப் ஸ்டாடிஸ்டிக்ஸ் வெளியிட்ட ‘உலகின் பணக்கார நடிகர்கள்’ பட்டியலின்படி, 770 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 6,306 கோடியுடன் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் ஷாருக்கான் தான்.

இதில் அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஜெர்ரி சீன்ஃபீல்ட் 1 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.

அந்தப் பட்டியல் பின்வறுமாறு

1- ஜெர்ரி சீன்ஃபீல்ட்: 1 பில்லியன் டொலர்

2- டைலர் பெர்ரி: 1 பில்லியன் டொலர்

3- டுவைன் ஜான்சன்: 800 மில்லியன் டொலர்

4- ஷாருக்கான்: 770 மில்லியன் டொலர்

5- டாம் குரூஸ்: 620 மில்லியன் டொலர்

6- ஜாக்கி சான்: 520 மில்லியன் டொலர்

7- ஜார்ஜ் குளூனி: 500 மில்லியன் டொலர்

8- ராபர்ட் டி நீரோ: 500 மில்லியன் டொலர்

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...