உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

Date:

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்று (ஜன. 23) தொடங்கியது.

அதன்படி, உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி வரை 22 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 55,513 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான தேர்வு நாடளாவிய ரீதியில் 2,200 மையங்களில் நடைபெறவுள்ளது. தேர்வு நிலைய ஒருங்கிணைப்பிற்காக 317 ஒருங்கிணைப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த ஆண்டு தேர்வுக்கான கட்டுரை வினாத்தாளுக்கு 10 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் சான்றளிக்கப்பட்ட அடையாளக் கடிதம் ஆகியவற்றை பரீட்சை நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...