உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதியில் மின்வெட்டுகளை திட்டமிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஜனவரி 23, முதல் பெப்ரவரி 17, 2023 வரை தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தங்களது கல்வி உரிமையை தடையின்றி பயன்படுத்த முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதியில் நிலவும் மின்வெட்டு அட்டவணை குறித்த அண்மைக்காலச் செய்திகளைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிடும் போதே அது இவ்வாறு தெரிவித்துள்ளது.