கலாநிதி அஷ்ஷேக் எம்.இசட்.எம். நஃபீல் பேராசிரியராக பதவி உயர்வு!

Date:

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரபு மற்றும் இஸ்லாமிய துறைத்தலைவராக கடமையாற்றிவரும் ஹெம்மாதகமவை பிறப்பிடமாகக் கொண்ட எம்.இசட்.எம். நஃபீல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

ஆரம்பக் கல்வியை தனது சொந்த ஊரான ஹெம்மாதகமவிலும் பல்கலைக்கழக பட்டப்படிப்பை பேராதனை பல்கலைக்கழகத்திலும் முடித்த இவர் 1999 இல் அதே பல்கலைக்கழகத்தில் தனது முதுமாணி கற்கை நெறியையும் பூர்த்தி செய்தார்.

பின்னர் இங்கிலாந்திற்கு புலமைப்பரிசில் பெற்று சென்ற இவர் 2009 இல் லண்டன் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி (Phd) கற்கை நெறியை பூர்த்தி செய்தார்.

சிறிது காலம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றிய இவர் இலங்கையின் மூத்த அறிஞர்களான ஏ.எல்.எம். இப்ராஹிம், எம்.ஐ.எம். அமீன் போன்றவர்கள் வகித்த துறைத்தலைவர் பதவியை சுமந்து அறிவு பணியாற்றிவரும் பேராசிரியர் அஷ்ஷேக் எம்.இசட்.எம். நஃபீல் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...