5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை: மேல் மாகாணத்தில் 10,585 மாணவர்கள் சித்தி!

Date:

2022 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 48,257 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் மொத்தம் 329,668 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அதிகளவான மாணவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மாகாண ரீதியாக சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை விபரம் இதோ!

  • மேல் மாகாணம்- 10,585
  • தென் மாகாணம்- 6,812
  • வடமேல் மாகாணம்- 6,601
  • சப்ரகமுவ மாகாணம்- 5,170
  • மத்திய மாகாணம்- 5,017
  • வடமத்திய மாகாணம்- 3,957
  • ஊவா மாகாணம்- 887
  • கிழக்கு மாகாணம்- 3,479
  • வட மாகாணம்- 2,749

பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 20,000 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...