போதைப்பொருள் பாவனையை ஒழித்தல் தொடர்பில், புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் உயர் மட்ட கலந்துரையாடல்!

Date:

புத்தளம் பிரதேச உயர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் புத்தளம் மாவட்ட சர்வமத குழுவிற்கும் இடையிலான உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்று புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் 27ம் திகதி மாலை இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.வை.. செனவிரத்ன, பொலிஸ் அத்தியட்சகர்கள், நிலையங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் நிலைய அதிகாரிகள், போக்குவரத்துப் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளும், புத்தளம் மாவட்ட சர்வமதக் குழு மதத் தலைவர்களும் மற்றும் பல்லம, கல்பிட்டி, கருவலகஸ்வெவ, புத்தளம், ஆனமடுவ, வனாத்திவில்லு, சாலியவவ, முந்தலம், உடப்பு ஆகிய பிரதேசங்களின் பொலிஸ் அதிகாரிகள் மஹகுபுக்கடவெல, நுரைச்சோலை மற்றும் நவகத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

புத்தளம் மாவட்ட சர்வமதக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி புத்தியகம ரதன தேரர், குருக்கள், அருட் தந்தை ஜெயராஜ் மற்றும் அருட் தந்தை ரத்னமலர், அஷ்.அப்துல் முஜீப், மற்றும் திரு.ருமைஸ் ,அலிசப்ரி, முஸம்மில் ஹாஜியார் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர் களும் கலந்துகொண்டனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இக் கலந்துரையாடலின் பின்னர் போதைப்பொருள் பாவனை, விற்பனையை ஒழிக்கும் வகையில் பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

*கிராமிய பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துதல்
*தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடாத்துதல்
*கள நிலை தொடர்பான தகவல்களை காட்சிப் படுத்தல்
*கிராமப்புற குழுக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே உறவுகளை பலப்படுத்தல்
*மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முன்னேற்ற ஆய்வுக் கூட்டங்களை நடாத்துதல் .

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...