‘நான் தவறு செய்தேன் என்று தீர்ப்பில் கூறப்படவில்லை’:அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால போட்டி!

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே முன்னிறுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மன்னிப்பு கேட்டார்.

தமது ஆட்சிக்காலத்தில் இவ்வாறானதொரு அனர்த்தம் இடம்பெற்றமைக்காக தாம் மன்னிப்புக் கோருவதாகவும், தாக்குதல்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்தார்.

“நான் தவறு செய்தேன் என்று தீர்ப்பில் கூறப்படவில்லை, ஆனால் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு ஜனாதிபதியும் பொறுப்பு. அதுதான் எனக்கும் வழக்குக்கும் உள்ள தொடர்பு” என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...