‘தாய்நாட்டை நேசிக்கும் எந்தப் பிரஜையும் சுதந்திர தினத்தை ‘கரிநாள் என்று சொல்லமாட்டார்கள் ‘

Date:

இலங்கையில் பிறந்த எந்தக் குடிமகனும், தாய்நாட்டை நேசிக்கும் எந்தப் பிரஜையும் தேசிய சுதந்திர தினத்தை கரிநாள் என்றோ, கறுப்பு நாள் என்றோ சொல்லமாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை வடக்கு கிழக்கில் கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி பேரணிக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்த நாட்டில் எதிர்த் தரப்பினரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கி சிலர் தேசிய சுதந்திர தினத்தை கறுப்பு நாள் என்று சொல்வதும், கரிநாள் என்று கூறுவது துரதிர்ஷ்டவசமே.

அவ்வாறானவர்களின் விமர்சனங்களை ஒரு பக்கத்தில் தூக்கி வைத்துவிட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க, நாட்டை நேசிக்கும் அனைத்து உறவுகளும் ஒன்றாகச் சங்கமிக்க வேண்டும்” என்று ரணில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...