‘முஸ்லிம்களை வாழ விடு’:காத்தான்குடியில் பள்ளிவாசலை விடுவிக்கக் கோரி சாத்வீகப்போராட்டம்!

Date:

பொலிசார் கையகப்படுத்திய பள்ளிவாசலை விடுவிக்கக் கோரி அறவழி சாத்வீகப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (06) பள்ளிவாசல் முன்றலில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டது.
புதிய காத்தான்குடி, கப்பல் ஆலிம் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலை பொலிசார் கையகப்படுத்தியதற்கு, எதிர்ப்புத் தெரிவித்தும், பள்ளிவாசலை  மீளப்பெற்றுத்தரக் கோரியும்  இந்த போராட்டம் இடம்பெற்றது.

காத்தான்குடி கப்பல் ஆலிம் வீதியில் இருக்கும் தாருல் அதர் பள்ளிவாசல் நீண்ட காலமாக மூடி தடை செய்யப்பட்டிருந்தது.

தற்போது அந்த இறை இல்லத்தை இலங்கை பொலிஸ் தினைக்களம் அத்துமீறி பொலிஸாரின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிராந்திய காரியாலயமாக மாற்ற முடிவு செய்துள்ளார்கள்.

இதன்போது காத்தான்குடி முழுவதும் வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது சந்தைகள் என்பவற்றை மூடி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நன்றி:எம்.பஹ்த் ஜுனைட்

Popular

More like this
Related

பேரிடரால் சேதமடைந்த மத ஸ்தலங்களை கட்டியெழுப்ப ஹஜ் குழுவிடமிருந்து ரூ. 5 மில். நன்கொடை

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களின் மறுசீரமைக்கும் பணிகளுக்காக,...

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை எதிர்பார்ப்பு

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக பெப்ரவரி 10 வரை கனமழை...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,தெற்கு மற்றும் சப்ரகமுவ...

பேரிடரால் பாதிக்கப்பட்ட தொழில்துறைக்கு ரூ. 200,000 வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர...