‘முஸ்லிம்களை வாழ விடு’:காத்தான்குடியில் பள்ளிவாசலை விடுவிக்கக் கோரி சாத்வீகப்போராட்டம்!

Date:

பொலிசார் கையகப்படுத்திய பள்ளிவாசலை விடுவிக்கக் கோரி அறவழி சாத்வீகப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (06) பள்ளிவாசல் முன்றலில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டது.
புதிய காத்தான்குடி, கப்பல் ஆலிம் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலை பொலிசார் கையகப்படுத்தியதற்கு, எதிர்ப்புத் தெரிவித்தும், பள்ளிவாசலை  மீளப்பெற்றுத்தரக் கோரியும்  இந்த போராட்டம் இடம்பெற்றது.

காத்தான்குடி கப்பல் ஆலிம் வீதியில் இருக்கும் தாருல் அதர் பள்ளிவாசல் நீண்ட காலமாக மூடி தடை செய்யப்பட்டிருந்தது.

தற்போது அந்த இறை இல்லத்தை இலங்கை பொலிஸ் தினைக்களம் அத்துமீறி பொலிஸாரின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிராந்திய காரியாலயமாக மாற்ற முடிவு செய்துள்ளார்கள்.

இதன்போது காத்தான்குடி முழுவதும் வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது சந்தைகள் என்பவற்றை மூடி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நன்றி:எம்.பஹ்த் ஜுனைட்

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...