துருக்கியில் 7 நாள் துக்க தினம் அனுஷ்டிப்பு: துருக்கி தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிப்பு!

Date:

துருக்கியில் நேற்று தொடர்ந்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில்,  துருக்கி அரசு 7 நாட்கள் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது.

அத்தோடு வரும் 12ம்  திகதி துருக்கி மற்றும் வெளிநாடு பிரதிநிதி அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் துருக்கியில் 5.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவால் மீட்பு பணியில் ஏற்கனவே தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் நேற்று 7.8 ரிக்டர், 7.5 ரிக்டர், 6.0ரிக்டர் என தொடர்ந்து மூன்று முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாகவும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டிட இடிபாடுகளை அகற்றி உடல்களை் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...