கொழும்பு டி.பி.ஜெயா மாவத்தையில் உள்ள முஸ்லிம் சமய கலாசார திணைக்கள கட்டடத்திற்கு கிறிஸ்தவ கலாசார திணைக்கள அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது.
இதன்போது அலுவலக ஆரம்ப நிகழ்வில் புத்த மத மற்றும் மத விவகார கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் கிறிஸ்தவ மத தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை இந்து மற்றும் கிறிஸ்தவ மத விவகார திணைக்களங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் இக்கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
கலாசார அமைச்சின் தீர்மானத்தின்படி 3ஆம் 4ஆம் மாடிகளுக்கு இந்துமத விவகார திணைக்களமும், 5ஆம் மாடிக்கு கிறிஸ்தவ விவகார திணைக்களமும் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. 6ஆம், 7ஆம், 8ஆம் மாடிகளில் கேட்போர் கூடம் அமைந்துள்ளது.
9 மாடி கட்டடத்தில் இயங்கி வந்த முஸ்லிம் சமய கலாசார திணைக்கள நடவடிக்கைகள் 1ஆம்,2ஆம் மாடிக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வக்பு சபை, வக்பு ட்ரிபியுனல், காதிகள் மேன்முறையீட்டு சபை, ஹஜ் குழு காரியாலயம், அரபுக் கல்லூரி, அஹதியா தலைமையகம் போன்றவை வாடகைக் கட்டடங்களிலேயே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(படங்கள்: அஷ்ரப் ஏ. சமத்)