‘இலங்கை மக்களும் துருக்கியரின் துயரத்தில் பங்குகொள்கின்றனர்’: இரங்கல் பதிவில் இம்தியாஸ் பாக்கிர்

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்  இன்று(09) கொழும்பில் உள்ள இலங்கைக்கான துருக்கி இராச்சியத்தின் தூதுவர் திருமதி ரகிபே டெமெட் செகேர்சியொக்லு அவர்களைச் சந்தித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் பேரழிவை சந்தித்துள்ள துருக்கி அரசாங்கத்திற்கும் துருக்கி மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்ததோடு,அனுதாப பதிவேட்டிலும் தமது குறிப்பை பதிவிட்டார்.

இதன்போது  துருக்கி அரசுக்கும் துருக்கி மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, துருக்கி மக்கள் இழந்த தமது அன்புக்குரியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது பிரார்த்தனைகளையும் பதிவிட்டார்.

கருணையுள்ள துருக்கி மக்கள் தனியாக இல்லை என்பதையும்,உலக நாடுகளுடன் இணைந்து இலங்கை வாழ் மக்களும் துருக்கியரின் துயரத்திலும் தேவையிலும் அவர்களுடன் முன்நிற்கிறோம்.

பிரிந்து சென்ற ஆன்மாக்களுக்கு அல்லாஹ் கருணை புரியட்டும் எனவும்,அவர்கள் விட்டுச் சென்றவர்களுக்கு சாந்தியை வழங்குவானாக எனவும் தமது குறிப்பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாகவும், பேரழிவாகவும் இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...