நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் விஷேட பிரார்த்தனை!

Date:

துருக்கி மற்றும் சிரியாவில் இடம் பெற்ற நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு காயிப் ஜனாஸா தொழுகையும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், துருக்கி, சிரியா நாடுகள் வெகு விரைவில் வலமையான நிலைக்கு திரும்பவும் விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றன.

இந்நிகழ்வு கொழும்பு 07 தெவட்டகஹ அஷ்-ஷெய்க்ஹ் உஸ்மான் வலியுல்லாஹ் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

பள்ளிவாசல் அதிபர் அல்-ஹாஜ் ரியாஸ் சாலி தலைமையில் சமயப் பிரார்த்தனை நடைபெற்றது.

இந்நிகழ்வில், காயிப் ஜனாஸா தொழுகையை அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் அலவி மௌலானா முர்ஸி நடாத்தியதுடன் விஷேட துஆ பிரார்த்தனையை அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலனா அல்-காதிரி நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் ஸாதாத்மார்கள், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், புத்திஜீவிகள் உட்பட பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...