பொரளையில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்: இராணுவத்தினர் இருவர் கைது!

Date:

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேஸ்லைன் மாவத்தை, சஹஸ்புர பிரதேசத்தில் பகுதியில் நேற்று (13) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக் காயத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது அருகில் இருந்த குறித்த பெண் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சஹஸ்புர பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தினால் குறித்த இராணுவ வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...