ஜூன் 1ஆம் திகதி முதல் 7 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை தடை செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள் மற்றும் கிளறிகள், பிளாஸ்டிக் தயிர் ஸ்பூன்கள், தட்டுகள், கோப்பைகள் (தயிர் கோப்பைகள் தவிர), கத்திகள், கரண்டிகள் மற்றும் முட்கரண்டிகள், பிளாஸ்டிக் மலர் மாலைகள், பிளாஸ்டிக் இடியாப்ப தட்டுகள் என்பவற்றுக்கு நாட்டில் தடை செய்யப்பட உள்ளன.
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவு முகாமைத்துவம் தொடர்பிலான நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு அமைய சுற்றுச்சூழல் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.