உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு கொதடுவவில்..!

Date:

க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கல்வி, ஆன்மீக வழிகாட்டல் செயலமர்வு எதிர்வரும் 22,23ம் திகதிகளில் கொத்தட்டுவ நாஸ் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கல்வி மற்றும் தொழிற் துறைகளில் நவீன சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் நாஸ் கலாசார நிலையத்தினால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 8.30 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறவுள்ள இந்த செயலமர்வில் இலங்கையில் இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற விரிவுரையாளர்களால் பல்வேறு தலைப்புகளில் விரிவுரைகள் நடாத்தப்படவுள்ளன.

பெப்ரவரி 22ம் திகதி புதன்கிழமை மாணவிகளுக்கும், 23ம் திகதி வியாழக்கிழமை மாணவர்களுக்கும் என வெவ்வேறாக இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளது.

இந்தகருத்தரங்கில் நீங்களும் கலந்து கொண்டு பயன்பெற விரும்பின் 075 067 0556, 077 067 0551 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாகதொடர்பு கொண்டு உங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ளுங்கள்.

 

Popular

More like this
Related

இராஜதந்திர நியமனங்களில் ஜித்தா ஏன் ஒரு விதிவிலக்காகிறது ?

ஜித்தாவுக்கான கொன்சல் ஜெனரல் நியமனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி...

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை...

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும்...