நீர் கட்டணமும் அதிகரிக்கப்படலாம்?

Date:

மின் கட்டண அதிகரிப்பு காரணமாக நீர் கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என நேற்றைய தினம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முறையான ஆய்வுக்குப் பிறகு, நீர்க் கட்டண உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்க நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தயாராகி வருகிறது.

நீர்த்தேக்கங்களில் இருந்து நுகர்வோருக்கு குடிநீரை விநியோகிப்பதற்காக செலவிடப்படும் மொத்தத் தொகையில் 35 வீதம் மின்சாரத்திற்காக செலவிடப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் திகதி தண்ணீர் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி, ஒரு யூனிட் நீருக்கான பயன்பாட்டுக் கட்டணமும், குடிநீர் கட்டணத்திற்கான மாதாந்திர சேவைக் கட்டணமும் அதிகரிக்கப்பட்டாலும், அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை முன்னர் தெரிவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் மின் கட்டண உயர்வைக் கருத்தில் கொண்டு நீர்க் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கருதுகிறது.

இதற்கிடையில், 66 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிராக பல துறைகளைச் சேர்ந்த மக்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...