வெளிநாட்டுப் பயணங்களின் போது அரச உயர் அதிகாரிகளுக்கு கிடைக்கும் ஆடம்பர வசதிகளுக்கு ஆப்பு!

Date:

ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களின் போது வணிக வகுப்பில் பயணிப்பதைத் தடைசெய்து விசேட சுற்றறிக்கையை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த சுற்றறிக்கை இந்த வாரத்திலேயே வெளியிடப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சின் செயலாளர்கள், அமைச்சரவை செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் உத்தியோகபூர்வ அரசாங்க வெளிநாட்டு பயணங்களின் போது வணிக வகுப்பு வசதிகளை அனுபவிக்கும் உயர் அரசாங்க அதிகாரிகளாவர்.

நாட்டின் மோசமான நிதி நிலைமையினால் மக்கள் அவதியுறும் வேளையில் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவசியமானது.

எனவே அரசாங்கத்தின் செலவீனங்களைக் குறைக்கும் கொள்கைக்கு அமைவாக அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வெளிநாட்டு பயணங்களின் போது அரச உயர் அதிகாரிகள் தங்கும் ஹோட்டல்களுக்கும் இந்த சுற்றறிக்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...