Update:ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (20) பிற்பகல் கொழும்பில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகம், நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் உட்பட பல பகுதிகளுக்குள் இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை உள்நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உட்பட பலருக்கும் கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தேர்தலை தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக இன்று  பிற்பகல் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகிறது.

இந்நிலையிலேயே குறித்த பகுதிகளுக்குள் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...