ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

Date:

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 25 குழுக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தீவு மற்றும் கோட்டை பொலிஸ் பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பல கட்டிடங்களுக்குள் பிரவேசிக்க எதிர்ப்பாளர்கள் குழுவொன்று திட்டமிட்டுள்ளதாகவும் இதனை தடை செய்ய வேண்டுமெனவும் கோட்டை பொலிஸார் கோட்டை நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளுக்குள் பிரவேசிக்க வேண்டாம் எனவும், பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளை மறிக்க வேண்டாம் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...