ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

Date:

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 25 குழுக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தீவு மற்றும் கோட்டை பொலிஸ் பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பல கட்டிடங்களுக்குள் பிரவேசிக்க எதிர்ப்பாளர்கள் குழுவொன்று திட்டமிட்டுள்ளதாகவும் இதனை தடை செய்ய வேண்டுமெனவும் கோட்டை பொலிஸார் கோட்டை நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளுக்குள் பிரவேசிக்க வேண்டாம் எனவும், பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளை மறிக்க வேண்டாம் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...