பதவி விலகினார் மயந்த திஸாநாயக்க!

Date:

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து தாம் விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் சபாநாயகருக்கு இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக மயந்த திஸாநாயக்கவை ஆளும் கட்சி முன்மொழிந்தது. அந்த பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்தது.

எனினும், ஆளுங்கட்சியினரால் பரிந்துரைக்கப்பட்ட மயந்த திஸாநாயக்க பெரும்பான்மை வாக்குகள் மூலம் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக தெரிவானார். பின்னர், இந்த விடயம் பாராளுமன்றத்திலும் பொது வெளியிலும் பேசு பொருளானது.

இந்த நிலையில், மயந்த திஸாநாயக்க குறித்த பதவியிலிருந்து விலகும் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...