ஹொலிவூட் படங்களைப் பார்த்தால் சிறை: வடகொரிய பெற்றோர்களுக்கு கிம் எச்சரிக்கை!

Date:

ஹொலிவூட்  படங்களை காண தங்கள் பிள்ளைகளை அனுமதிக்கும் பெற்றோர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார்.

வடகொரியாவில் வெளிநாட்டு திரைப்படங்கள் தொலைக்காட்சி தொடர்களுக்கு கிம் ஜாங் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த தடையை மீறி பிரபலமான திரைப்படங்களை பார்வையிடுவோரின் பெற்றோர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது.

முன்னர் இதுபோன்ற குற்றங்களுக்கு கைதாகும் பெற்றோர்கள் எச்சரித்து விடுவிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது தென் கொரிய திரைப்படங்கள் மற்றும் இசைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போன்று ஹாலிவுட் படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உடனடி தண்டனையும் விதிக்கப்பட உள்ளது.

அதுமட்டுமின்றி வெளிநாட்டு திரைப்படங்களை சட்டத்திற்கு புறம்பாக வடகொரியாவுக்கு எடுத்துவரும் நபர்களுக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சட்டத்திற்கு உட்பட்டு வளர்க்க வேண்டும் எனவும் வடகொரிய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஹொலிவூட்  அல்லது தென் கொரிய திரைப்படத்தைப் பார்க்கும் ஒரு மகன் அல்லது மகளின் பெற்றோர்கள் கட்டாய உழைப்பு முகாமில் ஆறு மாதங்கள் கழிப்பார்கள் எனவும் அவர்களின் பிள்ளைகள் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அணுபவிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

சர்வாதிகார நாடான வட கொரியா, அதன் தலைவர் கிம் ஜாங் உன்னால் ஆளப்படுகிறது, அசாதாரண விதிகள் மற்றும் சட்டங்கள் உள்ளன.

இப்போது, மேற்கத்திய ஊடக அடக்குமுறையைத் தீவிரப்படுத்தும் முயற்சியில், மேற்கத்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து தங்கள் குழந்தைகள் பிடிபட்டால், பெற்றோரை தண்டிப்பதாக வட கொரியா மிரட்டியுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...