பள்ளிக் குழந்தைகளையும் விட்டு வைக்காத பொலிசாரின் கண்ணீர்ப்புகை தாக்குதல்: இன்று கொழும்பில்!

Date:

கொழும்பில் இன்று இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை தாக்குதல்களில் சிக்கி பல பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் நேற்றைய தினம் (07) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைப்பதற்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகித்ததை எதிர்த்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டது.

கேம்பிரிட்ஜ் பிளேஸில் இன்றும் போராட்டக்காரர்கள் நுழைந்ததையடுத்து, அவர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை போலீசார் பயன்படுத்தினர்.

எவ்வாறாயினும், கொழும்பு கேம்பிரிட்ஜ் பிளேஸுக்கு அருகில் பொலிஸாரின் கண்ணீர்ப்புகைத் தாக்குதலுக்கு பல இளம் பாடசாலை மாணவர்கள் இலக்காகி உள்ளனர்.

கண்ணீர்ப்புகைத் தாக்குதலுக்கு மத்தியில் பள்ளிக் குழந்தைகள் இருமல் மற்றும் கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளாகியதை அடுத்து அவர்கள் மீண்டும் அருகிலுள்ள பாடசாலைக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...