‘போதை ஒழிப்போம்,பாதை வகுப்போம்’: புத்தளம் ஹுசைன் பள்ளிவாசலில் விசேட விழிப்புணர்வு!

Date:

‘போதை ஒழிப்போம், பாதை வகுப்போம்’ என்ற கருப் பொருளில் புத்தளம் யா ஹுசைன் பள்ளிவாசலில்  விசேட விழிப்புணர்வு நிகழ்வொன்று அண்மையில் இடம்பெற்றது.

பள்ளிவாசலின் தலைவர் அஷ் ஷெய்க் ஷாபி ஸஃதி அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வு  நடைபெற்றது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் புத்தளம் பிரதேச பொலிஸ் அதிகாரிகள், சர்வமத் தலைவர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை புத்தளம் மாவட்டத் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் பிள்ளையார் கோவில் குருக்கள் நகர சபை உறுப்பினர் சகோதரர் சிகான், கிராம சேவகர் ரஸ்மி (GS) மற்றும் பள்ளிவாசலின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அதேநேரம்,  போதை ஒழிப்பை எப்படி கையாள வேண்டும், அதற்கான நடைமுறைகள் யாவை என்பதை இரத்தின சுருக்கமாக பொலிஸ் அதிகாரிகள்   கருத்துக்களை முன் வைத்தனர்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களும் போதை ஒழிப்பு பற்றின பல்வேறு விடயங்களையும் தெளிவுபடுத்தல்களையும் குறிப்பிட்டார்.

இதேவேளைபிரபல உளவியல் ஆலோசகர் சகோதரர் ஆதில் ஹசன் சமூகத்தை அச்சுறுத்தும் போதை என்ற தலைப்பில் சிங்களத்திலும் தமிழிலும் உரையாற்றினார்.

. இந்நிகழ்வு இரவு 9.30 மணிவரை சமூக சீர் திருத்தத்திற்கான தலைப்புகளில் தலை சிறந்த உலமாக்களின் உரைகளோடு மிக சிறப்பாக நிறைவு பெற்றதுடன் ஏராளமான இளைஞர்களும் இதன்போது கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...