இரண்டு வாரங்களில் மருந்து தட்டுப்பாடு முடிவுக்கு வரும்: கெஹலிய

Date:

இலங்கையில் இன்னும் இரண்டு வாரங்களில் மருந்து தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பற்றாக்குறையாக இருந்த 151 மருந்துகளில் 81 மருந்துகளை கடந்த வியாழக்கிழமைக்குள் கொள்வனவு செய்ய முடிந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கான நிதியை ஒதுக்கிய பிறகு  செலவீனங்களைப் பொறுத்தவரை நிதி அமைச்சு சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை அளித்துள்ளது, என்று அவர் கூறினார்.

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படுவதில் எந்த உண்மையும் இல்லை, ஏனெனில் அனைத்து அவசர அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அதே நேரத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சைகள் போன்ற அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

‘முஸ்லிம் ஊடகங்கள்’ குறித்த பிரதி அமைச்சர் முனீர் முழப்பரின் கருத்து மிகவும் கண்டனத்துக்குரியது: முஸ்லிம் மீடியா போரம் அறிக்கை

முஸ்லிம் ஊடகங்களைப் பிரதிநிதித்துவம் செய்வோர் இனவாத சக்திகளுக்குத் துணை போவதாக சமய...

அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

அகமதாபாத் மற்றும் கொழும்புக்கு இடையே புதிய நேரடி விமான சேவை இன்று...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...