இரண்டு வாரங்களில் மருந்து தட்டுப்பாடு முடிவுக்கு வரும்: கெஹலிய

Date:

இலங்கையில் இன்னும் இரண்டு வாரங்களில் மருந்து தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பற்றாக்குறையாக இருந்த 151 மருந்துகளில் 81 மருந்துகளை கடந்த வியாழக்கிழமைக்குள் கொள்வனவு செய்ய முடிந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கான நிதியை ஒதுக்கிய பிறகு  செலவீனங்களைப் பொறுத்தவரை நிதி அமைச்சு சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை அளித்துள்ளது, என்று அவர் கூறினார்.

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படுவதில் எந்த உண்மையும் இல்லை, ஏனெனில் அனைத்து அவசர அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அதே நேரத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சைகள் போன்ற அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...