மூன்றாவது முறையாக சீன ஜனாதிபதியாக பதவியேற்றார் ஜி ஜின்பிங்!

Date:

சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் பதவியேற்றார் .

தேசிய மக்கள் காங்கிரசின் ஏறக்குறைய 3,000 உறுப்பினர்கள் ஒருமனதாக அவருக்கு வாக்களித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவரை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், சீனாவின் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவராகவும், ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சீன பாராளுமன்றத்தின் தலைவராக ஜாவோ லெஜியும், புதிய துணை ஜனாதிபதியாக ஹான் ஜெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொடர் வெற்றிகளுடன், சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக ஜி ஜின்பிங் மாறி வருகிறார்.

இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக முடியும் என்ற வரம்பை கடந்த 2018-ம் ஆண்டு ஜி ஜின்பிங் நீக்கி இருந்தார். இதன் அடிப்படையில் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...