மேற்பார்வை குழுக்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்!

Date:

பாராளுமன்ற மேற்பார்வை குழுக்கள் சிலவற்றுக்கான புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச தொடர்புகளுக்கான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை சமப்படுத்துவதற்கான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட நியமிக்கப்பட்டுள்ளார்.

சேவைகள் மற்றும் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான தெரிவுக்குழுவிற்கான புதிய தலைவராக புத்திக பத்திரண நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.

எரிசக்தி மற்றும் போக்குவரத்து தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவராக நாலக்க பண்டார கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஒழுக்கம் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தலைவராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தலைவராக சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வுக்கான துறை மேற்பார்வைக் குழுவின் தலைவராக உபுல் மகேந்திர ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...