ஜம்இய்யதுல் உலமா திஹாரி கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘ரமழான் வழிகாட்டல்’ கூட்டம்!

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா திஹாரி கிளையின் ஏற்பாட்டில், கடந்த 13 ஆம் திகதி ரமழான் வழிகாட்டல் என்ற தலைப்பில் லப்ஸன் திருமண மண்டபத்தில் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கும், இமாம்களுக்குமான விஷேடக் கூட்டம் நடைபெற்றது.

அஷ்ஷெய்க் ஸைபுல்லாஹ் இஹ்ஸானியின் தலைமையில் அஷ்ஸெய்க் அர்கம் காரியின் கிராஆத்துடன் கூட்டம் ஆரம்பமானதுடன் அஷ்ஷேக் இஜ்லான் நூரி வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதேவேளை இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் அம்ஜத் ரஷாதி ‘ஆலிம்களின் பணியும் சமூகத்தின் கடமைகளும்’ எனும் தலைப்பிலும் , அஷ்ஷெய்க் ஹஸன் பாரிஸ் மதனி  ‘அமானிதம் பேணுவோம்’ எனும் தலைப்பிலும், அஷ்ஷெய்க்  ஸைபுல்லாஹ் இஹ்ஸானி ‘ஜம்மியத்துல் உலமாவின் பணிகளும் எமது எதிர்கால நடவடிக்கைகள்’ எனும் தலைப்பிலும் விசேட உரைகள் நிகழ்த்தினார்கள்.

இதனைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றதுடன் கப்பாரத்துல் மஜ்லிஸுடன் நிறைவுபெற்றது.

Moulavi Ijlan (Noori)

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...