உள்ளூராட்சி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ காலத்தை நீடிக்க முடியுமா?

Date:

உள்ளூராட்சி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ காலத்தை நீடிக்க முடியுமா? சட்டமா அதிபரின் பரிந்துரை இன்று (20) பெற்றுக்கொள்ளப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

340 உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம் நேற்று (19) நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

இதில் 29 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் அடங்கும்.

நாடளாவிய ரீதியில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் நிறுவப்பட்ட போதிலும், காலி மாவட்டத்தின் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றம் ஸ்தாபிக்கப்படுவது தாமதமானதால் அந்த உள்ளூராட்சி மன்றத்தின் பதவிக் காலம் முடிவடையவில்லை.

பதவிக்காலம் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக விவகாரங்கள் ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களின் கீழ் கொண்டு வரப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...