உள்ளூராட்சி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ காலத்தை நீடிக்க முடியுமா?

Date:

உள்ளூராட்சி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ காலத்தை நீடிக்க முடியுமா? சட்டமா அதிபரின் பரிந்துரை இன்று (20) பெற்றுக்கொள்ளப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

340 உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம் நேற்று (19) நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

இதில் 29 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் அடங்கும்.

நாடளாவிய ரீதியில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் நிறுவப்பட்ட போதிலும், காலி மாவட்டத்தின் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றம் ஸ்தாபிக்கப்படுவது தாமதமானதால் அந்த உள்ளூராட்சி மன்றத்தின் பதவிக் காலம் முடிவடையவில்லை.

பதவிக்காலம் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக விவகாரங்கள் ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களின் கீழ் கொண்டு வரப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...