உள்ளூராட்சி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ காலத்தை நீடிக்க முடியுமா?

Date:

உள்ளூராட்சி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ காலத்தை நீடிக்க முடியுமா? சட்டமா அதிபரின் பரிந்துரை இன்று (20) பெற்றுக்கொள்ளப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

340 உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம் நேற்று (19) நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

இதில் 29 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் அடங்கும்.

நாடளாவிய ரீதியில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் நிறுவப்பட்ட போதிலும், காலி மாவட்டத்தின் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றம் ஸ்தாபிக்கப்படுவது தாமதமானதால் அந்த உள்ளூராட்சி மன்றத்தின் பதவிக் காலம் முடிவடையவில்லை.

பதவிக்காலம் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக விவகாரங்கள் ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களின் கீழ் கொண்டு வரப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...