தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி மற்றும் பரிமாற்றக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் இன்று தெரிவித்துள்ளது.
“இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் BOP தொடர்பான பரிமாற்றக் கட்டுப்பாடுகளை படிப்படியாக அகற்றுவதற்கான திட்டத்தை அதிகாரிகள் உருவாக்குவார்கள்.
அந்தத் திட்டம் ஜூன் 2023க்குள் நிறைவு செய்யப்படும் ,” என IMF தலைமை அதிகாரி மசாஹிரோ நோசாக்கி தெரிவித்துள்ளார்.
இலங்கை சமீபத்தில் சில இறக்குமதி மற்றும் பரிமாற்ற கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும், அந்நிய செலாவணி மாற்றத்திற்கான விதிகள் மற்றும் சில இறக்குமதி செய்யப்பட்ட நுகர்வோர் பொருட்களின் மீதான தடைகள் இன்னும் உள்ளன.