IMF மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை மருத்துவ சேவைக்கு வழங்க வேண்டும்: மருத்துவர்கள் சங்கம்

Date:

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்படும் பணத்தில் சுகாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, மருந்து தட்டுப்பாடு, மருந்து விநியோகம், ஆய்வக விநியோகம் ஆகிய பகுதிகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என சங்கத்தின் தலைவர் நிபுணர் டாக்டர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

சுகாதார அமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட சமூக நலப் பணிகளை முழு வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் உழைக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுள்ளது.

மேலும், உலக வங்கி மற்றும் பிற கடன் உதவி வழங்குநர்களிடமிருந்து விரைவான கடன் உதவியாக மேலும் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை இப்போது பெற எதிர்பார்க்கிறது.

Popular

More like this
Related

இஸ்ரேல் சட்டங்களை மீறியமைக்காக 9 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!

இஸ்ரேலின் நடைமுறையிலுள்ள குடிவரவு சட்டங்களை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட 9 இலங்கை பிரஜைகள்,...

இந்தியாவின் RAW மற்றும் RSS மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க பரிந்துரை: அமெரிக்க ஆணையத்தின் அதிரடி அறிக்கை!

இந்தியாவில் மத சுதந்திரம் கடுமையாக மீறப்படுவதாகக் கூறி, இந்தியாவின் உளவு அமைப்பான...

7வது ஆண்டாக மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம விகாரையின் இப்தார் நிகழ்வு!

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம...

நல்லிணக்கம், சகவாழ்வு கலாசாரத்தை நோக்கிய தேசிய இளைஞர் இப்தார் நிகழ்வு

சமூகத்தின் பிரதான அங்கமாக இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும்...