IMF மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை மருத்துவ சேவைக்கு வழங்க வேண்டும்: மருத்துவர்கள் சங்கம்

Date:

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்படும் பணத்தில் சுகாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, மருந்து தட்டுப்பாடு, மருந்து விநியோகம், ஆய்வக விநியோகம் ஆகிய பகுதிகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என சங்கத்தின் தலைவர் நிபுணர் டாக்டர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

சுகாதார அமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட சமூக நலப் பணிகளை முழு வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் உழைக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுள்ளது.

மேலும், உலக வங்கி மற்றும் பிற கடன் உதவி வழங்குநர்களிடமிருந்து விரைவான கடன் உதவியாக மேலும் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை இப்போது பெற எதிர்பார்க்கிறது.

Popular

More like this
Related

மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு...

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை....

போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய இன்று முதல் புதிய முறை!

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் உமிழ்நீர் பரிசோதனை இன்று (17) முதல்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...