நஷ்ட ஈட்டை செலுத்த இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளன; உங்களால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள்: முன்னாள் ஜனாதிபதி

Date:

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, குறித்த நட்டஈட்டை வழங்குவதற்கு தற்போது நண்பர்களிடமிருந்து இயன்றளவு பணம் வசூலித்து வருவதாக தெரிவித்தார்.

எனது ஆட்சிக் காலத்தில், நான் உலகின் நம்பிக்கையை வென்று ஜனநாயகத்தை நிலைநாட்டி, ஒரு நல்ல நாடாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஈஸ்டர் தாக்குதல்கள் நிகழ்ந்து அனைத்தையும் அழித்துவிட்டது.

‘இப்போது 100 மில்லியன் நட்ட ஈடு செலுத்துமாறு எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, நான் திருடவில்லை வெடிகுண்டு வீசவில்லை. நட்டஈட்டை செலுத்த எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் பணம் வசூலிக்கிறேன். உங்களால் முடிந்தால், முடிந்த தொகையை எனக்குக் கொடுங்கள்’ என்று அவர் மேலும் கூறினார்.

குறித்த காலத்திற்குள் இழப்பீட்டுத் தொகையை செலுத்த முடியாத பட்சத்தில் நீதிமன்றம் தமக்கு எதிராக என்ன தீர்மானத்தை எடுக்கும் என்பது தனக்குத் தெரியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...