பசுமை பொருளாதாரத்திற்குள் நுழையும் வலயத்தின் முதலாவது நாடாக இலங்கை விளங்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இயற்கை சக்தி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த முதலீட்டாளர்களுடன் நேற்று(27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான பசுமைப் பொருளாதாரக் கொள்கை எதிர்வரும் இரு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடன் மறுசீரமைப்பு மற்றும் பசுமை ஆற்றலில் கவனம் செலுத்துதல் ஆகிய இரண்டு பிரதான பிரச்சினைகள் இலங்கைக்கு அவசியமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.