ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டது ரஷ்யா!

Date:

ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகளும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதத்திற்கும் தலைமை பதவியை வகிக்கின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமை பதவியை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மீதான பனிப்போருக்குப் பிறகு மேற்கு நாடுகளுடன் உறவுகள் மிகக் குறைந்த நிலையில் உள்ளன.

இந்நிலையில் ரஷ்யா தலைமைத்துவத்தை பொறுப்பேற்றமையானது சர்வதேச சமூகத்தின் முகத்தில் அறைந்தமைக்கு சமம் என உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பதவியை துஷ்பிரயோகம் செய்வதற்கான முயற்சியை அனைவரும் ஒன்றிணைத்து முறியடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இருப்பினும், சபையில் நிரந்தர உறுப்பினரான ரஷ்யாவை தலைமை பதவிக்கு வருவதை தடுக்க முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...