மே மாதத்தின் பின்னர் அரை சொகுசு பஸ் சேவை நிறுத்தப்படும்!

Date:

இலங்கையில் அரை சொகுசு பஸ் சேவை 2023 மே மாதத்தின் பின்னர் சேவையில் இருந்து நீக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அரை சொகுசு பஸ் சேவை தொடர்பில் பாரியளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து அமைச்சின் வழிகாட்டுதலின்படி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இயங்குகிறது என்றும், அரை சொகுசு பஸ் சேவையை சாதாரண சேவையாகவோ அல்லது சொகுசு பஸ் சேவையாகவோ மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

“அரை சொகுசு பஸ்களின் உரிமையாளர்கள் தங்கள் பஸ்களை சாதாரண பஸ் அல்லது சொகுசு பஸ்களாக மாற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவை மாற்றத்திற்காக உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. இது இலவசமாக செய்யப்படும்,”

தற்போது இயங்கி வரும் 430 அரை சொகுசு பஸ்களில், 20 பஸ்களின் உரிமையாளர்கள் மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...