நாட்டுக்கான மின்சார தேவை சடுதியாக அதிகரிப்பு!

Date:

நாட்டுக்கான மின்சார தேவை சடுதியாக அதிகரித்துள்ளதாக மின் சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக நாட்டின் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் நேற்று முன்தினம் ஒரு நாளுக்கான அதி கூடிய மின்சார தேவை பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தேவைக்கு ஏற்ப நேற்று முன்தினம் நிகர மின் உற்பத்தி மணிக்கு 49.53 ஜிகா வோட்டாக பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்றைய மின் தேவை 50 ஜிகா வோட்டையும் தாண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மின்சார தேவை அதிகரிப்பை கவனத்திற் கொண்டு ஹம்பாந்தோட்டையில் அண்மையில் நிறுவப்பட்ட டீசலில் இயங்கும் மின் உற்பத்தி நிலையம் உட்பட மின்சார சபைக்கு சொந்தமான அனைத்து அனல் மின் நிலையங்களும் மின் உற்பத்திக்காக உபயோகப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...