பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மகாநாயக்கர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Date:

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் மூன்று பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சமூகத்துடனான விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், நிபுணர்கள் குழுவின் ஊடாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள பொருத்தமற்ற சரத்துக்களை நீக்குமாறு கடிதத்தின் மூலம் பிரதம பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பௌத்த பீடங்களின் பிரதம பீடாதிபதி உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதன் பரந்த வரையறையை எடுத்துரைத்துள்ளார், இதன்படி அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் பதவியில் உள்ள அரசாங்கத்தின் குறைபாடுகள் பற்றி பேசுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

தற்போதைய நிலையில் சட்டமூலத்தை நிறைவேற்றுவது இலங்கைக்கு பாதகமாக அமையும் எனவும் எனவே நிபுணர் குழுவொன்றின் உள்ளீடுகளை பெற்று சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...